17th November 2023 05:27:28 Hours
பனாகொட மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் அதன் 11 வது ஆண்டு நிறைவை 15 நவம்பர் 2023 அன்று பனாகொடை மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பல நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
பனாகொட போதிராஜராமய விகாரையில் 2023 நவம்பர் 14 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட 'போதி பூஜை” மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வீரமரணம் அடைந்த, காயமடைந்த போர்வீரர்கள் ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள இராணுவத்தினருக்கு ஆசீர்வாதங்களை வேண்டி இடம்பெற்றது. மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களுடன் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் சமய வழிபாடுகளில் இணைந்துகொண்டனர்.
ஆண்டு நிறைவு நாளில் (15) 6 வது கஜபா படையணியின் படையினர் மேற்கு தளபதியை சம்பிரதாயத்திற்கு அமைய நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கி வரவேற்றதை தொடர்ந்து பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் கே.டி.பீ டி சில்வா ஆர்எஸ்பீ பீஎஸ்சீ மற்றும் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் ஏ.எம்.ஆர் அபேசிங்க ஆகியோரால் வரவேற்கப்பட்டார்.
அடுத்து, நாளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் மேற்குத் தளபதி அனைத்து நிலையினருடன் குழு படம் எடுத்துக்கொண்டதுடன் படைத் தலைமையக வளாகத்தில் மரக்கன்றும் நட்டுவைத்தார். பின்னர் மேற்கு தளபதி படையினருக்கு உரையாற்றினார்.
படையினர் உரையின் பின்னர், மேற்குத் தளபதி மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் பணிபுரியும் சிவில் ஊழியர்களுக்கு 40 உலர் உணவு பொதிகளை நன்கொடையாக வழங்கினார்.
61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எஜே.என் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எ.டபிள்யூ.எ.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ , மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் கே.டி.பீ.டி சில்வா ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் ஏ.எம்.ஆர் அபேசிங்க, கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோர் இந்த ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டனர்.