09th July 2023 22:23:37 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 142 வது காலாட் பிரிகேட் 7 வது கெமுணு ஹேவா படையணியின் ஒரு அதிகாரி மற்றும் 20 சிப்பாய்கள் இலங்கை கடலோர காவல் படை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் இணைந்து திங்கட்கிழமை (ஜூலை 03) மோதர காக்கைத் தீவு கடற்கரையில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.
கவர்ச்சிகரமான கடற்கரையாகவும், பெயர் பெற்ற பிரபலமான சுற்றுலா தளமாகவும் காணப்படுவதனாலும், தீவின் அழகை பாதுகாத்து பராமரிக்கும் நோக்கத்துடனும், கடல்வாழ் உயிரினங்களின் நன்மைக்காகவும் கடற்கரையை சுத்தம் செய்யும் இத் திட்டத்தில் பங்கேற்பாளர்கள் அனைவரும் இணைந்து குப்பைகள் மற்றும் பிற மாசுக்களை அகற்ற அயராது உழைத்தனர்.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியு ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 142 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜேகேஆர்பீ ஜயசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் 7 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிஎம்சிஎல் திசாநாயக்க ஆகியோர் இந்த திட்டத்தினை மேற்பார்வையிட்டனர்.