Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2023 00:32:03 Hours

மேற்கு தளபதி முன்மொழிவு படையலகு பயிற்சி பாடசாலையின் இடத்தை ஆய்வு

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் உத்தேச புதிய படையலகு பயிற்சிப் பாடசாலையின் கட்டுமானத் தளத்தைப் பற்றிய தரை மட்ட புதுப்பிப்புகளைப் பெறுவதற்காக மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ பல அதிகாரிகளுடன் புதன்கிழமை (ஜூலை 12) இராணுவத்தின் பனலுவ துப்பாக்கிச் சூட்டு திடலுக்கு கள விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, இலங்கை பீரங்கி படையணியின் 15 வது ட்ரோன் படையின் துப்பாக்கிச் சூட்டு திடலுக்கு அருகில் புதிய படையலகு பயிற்சிப் பாடசாலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அவர் உன்னிப்பாக ஆய்வு செய்தார்.

பயிற்சி மைதானம், நிர்வாக கட்டிடங்கள், பிரதேசத்தின் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள்,அணுகல் மற்றும் தங்குமிட வசதிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி படையலகு பயிற்சிப் பாடசாலை அமைப்பது தொடர்பான பல முக்கிய காரணிகளை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி உன்னிப்பாகக் கவனித்து, மீதமுள்ள சில கட்டிடங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்தார். இந்தத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக தரைப்படைகள் மற்றும் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே பயனுள்ள ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுடன் 14வது காலாட் படைபிரிவின் பிரதி தளபதி, பல பணிநிலை அதிகாரிகள் மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் அன்றைய ஆய்வு விஜயத்தின் போது கலந்துக்கொண்டனர்.