26th September 2023 21:33:51 Hours
பானலுவையில் உள்ள படையலகு பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்று வரும் நிர்மாணப்பணி தொடர்பான விடயங்களை மதிப்பாய்வு செய்வதற்கு மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் வெள்ளிக்கிழமை (செப். 22) பானலுவ துப்பாக்கிச் சூடு திடலுக்கு கள விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த மேற்குத் தளபதி படையலகு பயிற்சிப் பாடசாலைக்காக ஒதுக்கப்பட்ட புதிய தளத்தை பார்வையிட்டதுடன், பயிற்சி, நிர்வாக வசதிகள், தங்குமிடம் மற்றும் பயிற்சித் தொகுதிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தினார்.