2017 ஆம் ஆண்டு இராணுவ படையணிகளுக்கு இடையிலான மேசைப்பந்து போட்டியானது 24ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை பனாகொடை இலங்கை இராணுவ அப்பியாச பயிற்சிப் பாடசாலையில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் இராணுவத்தின் அனைத்து படைப்பிரிவுகளிலிருந்தும் திறமையான படைவீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியினர் வெற்றி பெற்றனர்.
மேலும் இந்த நிகழ்வில் ஆண்கள் மற்றும் பெண்களின் அற்புதமான நடன நிகழ்ச்சிகளுடன் சமிக்ஞை படையணி வீரர்கள் பிரகாசித்தனர்.இப்போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை சமிக்ஞை படையணியின் அதிகாரி கெப்டன் ஜே.எ.வை.எஸ் ஜயக்கொடி அவர்களும் சாதரன இராணுவ வீரர் ஈ.டி வருசாவித்தானவும் பெற்றுக்கொண்டார்கள்.
இந்த இறுதி போட்டியானது ஒக்டோபர் 27ஆம் திகதி பனாகொடை இலங்கை இராணுவ அப்பியாச பயிற்சிப் பாடசாலையில் நடைப்பெற்றது.
இப் போட்டியை பார்வையிட பிரதான விருந்தினராக மேஜர் ஜெனரால் சாகிகல்லகே அவர்களும் மேசைப்பந்து விளையாட்டு குழுவின் தலைவர் அஜித் விஜேசிங்க ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
Asics shoes | Air Jordan Release Dates 2020