27th May 2019 23:26:52 Hours
முஸ்லீம் சிவில் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இஃப்தார்' நிகழ்வுகள் இம் மாதம் (25) ஆம் திகதி கொழும்பிலுள்ள நகரசபை மைதானத்தில் மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு முஸ்லீம் சிவில் சமூகத்தின் அழைப்பையேற்று கொழும்பு மாநகரசபையின் தலைவி மேயர் திருமதி ரோசி சேனாநாயக, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தனர். இந்த நிகழ்வின் முதல் அங்கமாக கடந்த மாதம் 21 ஆம் திகதி குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து விஷேட பிரார்த்தனைகளுடன் இந்த நிகழ்வு ஆரம்பமானது.
இந்த நிகழ்வானது ‘நோன்பு திறப்பை’ முன்னிட்டு 1000 நபர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.
ஶ்ரீ.ல.மு.கா.வின் கருத்துப்படி, சனசமூக நிலையத்தின் பிரகாரம், 'சனசமூகத்திலுள்ள நோன்பு திறப்பானது ஒற்றுமையின் சாராம்சத்தை நிரூபிக்க ஒரு சிறந்த தளமாக விளங்குகிறது. எமது சகல சமூகங்களும் இலங்கையில் ஒற்றுமையாக இருக்கவும், எமது மக்களுக்காகவும், இஸ்லாமிய மதத்தின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தவும், இந்த நோன்பானது அமைதி, தொண்டு, இரக்கம் மற்றும் பல்வேறு இன மக்கள் இடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏப்ரல் மாதம் 21 ம் திகதி உதிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் மே மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது ஒன்றியத்தின் 'ஒற்றுமை விழிப்புணர்வை' ஒழுங்கமைப்பது இ.ல.மு.கா.வின் முக்கிய பங்களிப்பாக இருந்தது.
இந்த 'இஃப்தார்' நிகழ்வில் கடற்படைத் தளபதி வயிஷ் அத்மிரால் பியல் டீ சில்வா, இராணுவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டி எஸ் பங்ஷஜயா, 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக, முப்படையைச் சேர்ந்த முஸ்லீம் அதிகாரிகள் மற்றும் சிவல் சமூகத்தினர் இணைந்திருந்தனர்.Sport media | Sneakers