02nd July 2023 21:39:41 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம் கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு பிரதேசத்தில் உள்ள தனது படையினருடன் கலந்துரையாடும் நோக்கத்துடன் வியாழன் (ஜூன் 28) புதுக்குடியிருப்பில் உள்ள 68 வது காலாட் படை பிரிவுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்ட பின் 68 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் தளபதியை அன்புடன் வரவேற்றார்.
பின்னர், 68 வது காலாட் படைபிரிவின் தளபதியினால் படைப்பிரிவின் வகிப்பங்கு மற்றும் பணிகள் குறித்து அவருக்கு விளக்கப்படுவதற்கு முன் அவர் சில குழு படங்களை எடுத்துகொண்டனர். பின்னர் அவர் முகாம் வளாகத்தை பார்வையிட்டதுடன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தின் போது படையினருடன் கலந்துரையாடினார்.
அவர் புறப்படுவதற்கு முன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.