Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2023 17:50:15 Hours

முல்லைத்தீவு தளபதி 59 வது காலாட்படைப்பிரிவு படையினரை சந்திப்பு

மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு அவர்கள் அண்மையில் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக பொறுப்பேற்று கொண்டதனை தொடர்ந்து புதன்கிழமை (ஜூன் 21) 59 வது காலாட் படைபிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

59வது காலாட் படைப்பிரிவின் தளபதியினால் அன்புடன் வரவேற்கப்படுவதற்கு முன்னர் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன்பின் படைப்பிரிவின் பணி மற்றும் வகிப்பங்குகள் மற்றும் அதன் பொறுப்புகள் பற்றிய விளக்கத்தை பணிநிலைஅதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளிடம் இருந்து பெற்றார்.

அவர் அதிகாரிகளுடன் உரையாடியதுடன் குழு படங்களையும் எடுத்துக்கொண்டார். அவர் புறப்படுவதற்கு முன்பு விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் பதிவிட்டார்.