Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th November 2023 20:37:28 Hours

முல்லைத்தீவில் மேலும் 1335 தென்னம் பிள்ளைகள் விநியோகம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் முல்லைத்தீவு பிரதேசத்தில் ‘2 வது தெங்கு முக்கோண உத்தேச வலயத்தின் 2ஆம் கட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு தேராவில் மற்றும் சுதந்திபுரம் பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மேலும் 1335 தென்னம் பிள்ளைகள் திங்கட்கிழமை (நவம்பர் 6) வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ மற்றும் 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஆகியோரின் வழிகாட்டுதலுக்கமைய 68 வது காலாட் படைப்பிரிவின் 681 வது காலாட் பிரிகேட் படையினர் சேவையாற்றும் 6 கிராமசேவையாளர் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 26 குடும்பங்களுக்காக இவ் வினியோகம் மேற்கொள்ளப்பட்டது.

6 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் தேராவில் குடும்பங்களுக்கு தென்னம் பிள்ளைகள் விநியோகித்ததுடன் சுதந்திபுரத்தில் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் தென்னம் பிள்ளைகளை விநியோகித்தனர்.

681 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ் விஜேசிறிவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, அவர்கள் பணியில் இருந்த படையினரை நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.