09th July 2023 22:16:48 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 143 வது காலாட் பிரிகேட்டின் முதலாவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் நோயாளிகளுக்கு அண்மையில் செவ்விளநீர் வழங்கினர்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மற்றும் 143 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், முதலாவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் முதலாவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து 400 க்கும் மேற்பட்ட புத்துணர்வு தரும் செவ்விளநீர்களை வழங்கினர்.