Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2023 08:10:44 Hours

முதலாவது சிங்கப் படையணி கராத்தே வீரர்கள் படையலகு சாம்பியன்ஷிப்-2023 ல் வெற்றி

இலங்கை சிங்கப் படையணியின், படையலகுகளுக்கிடையிலான கராத்தே சாம்பியன்ஷிப் – 2023 அனைத்து படையலகு கராத்தே வீரர்களின் பங்கேற்புடன் 2023 ஓகஸ்ட் 14 முதல் 16 வரை இலங்கை சிங்கப் படையணியின் தலைமையக உள்கவிளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

அனைத்து இலங்கை சிங்கப் படையணியின் படையலகுகளும் இப்போட்டியில் பங்குபற்றியதுடன், முதலாவது இலங்கை சிங்கப் படையணிக்கும், 14 வது இலங்கை சிங்கப் படையணிக்கும் இடையில் இறுதி போட்டி இடம்பெற்றது. கடும் போட்டியின் நிறைவில் முதலாவது இலங்கை சிங்கப் படையணி வீரர்கள் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.

இலங்கை சிங்கப் படையணி கராத்தே குழுவின் தலைவர் பிரிகேடியர் எம்பீஎன்ஏ முத்துமாலை யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இலங்கை சிங்கப் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் சிஎஸ் திப்பொட்டுகே, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இறுதிப் போட்டிகளைக் காண இணைந்துகொண்டனர்.