24th December 2023 21:00:19 Hours
யாழ். பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் முதலாவது இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர், நத்தார் தினத்தை முன்னிட்டு முள்ளியான் பிரதேச பொதுமக்களுடன் இணைந்து இயக்கச்சி முள்ளியன் புனித செபஸதியர் தேவாலயத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 21) சிரமதான பணியை முன்னெடுத்தனர்.
தேவாலய சுற்றுச்சூழலின் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் 1 வது இயந்திரவியல் காலாட் படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.