04th November 2023 22:34:54 Hours
மின்னேரியவில் உள்ள காலாட்படை பயிற்சி நிலையத்தின் புதிய தளபதியாக கெமுனு ஹேவா படையணியின் பிரிகேடியர் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 03) மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.
புதிய தளபதி அவர்களை காலாட்படை பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி கேணல் எஸ்ஜேஎம்என்எஸ் பெரேரா யுஎஸ்பீ அவர்கள் வரவேற்றதுடன், நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அதன்பிறகு, மத அனுஷ்டானங்களை நிறைவேற்றிய பிறகு, தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர், அவர் படையினருக்கு உரையாற்றியதுடன் அமைப்புக்கான தனது நோக்கம் குறித்து அவர்களுக்கு விளக்கினார்.
இந்த நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் நிலைய தளபதியாக பணியாற்றினார். இப் பதவியில் முன்னதாக பணியாற்றிய பிரிகேடியர் டபிள்யூ.எஸ்.கே லியனவடுகே ஆர்எஸ்பீ அவர்கள் தற்போது இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.