02nd February 2023 18:30:48 Hours
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) சீதுவை புனித தோமஸ் கத்தோலிக்க சர்வதேசக் கல்லூரியில் நடைபெற்ற மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழாவிற்கு பிரதம அதிதியாக இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்கள் கலந்து கொண்டார்.
பாடசாலைக்கு வருகை தந்த பிரதம அதிதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்களை கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை சுதத் குணதிலக்க, அவர்களால் வரவேற்கப்பட்டு கல்லூரி வேண்ட் வாத்தியக் குழு சகிதம் கல்லூரி மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம் என்பவற்றுடன் அன்றைய நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் ,பிரதம அதிதி நாட்டின் எதிர்காலத் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்ற அழைக்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்கள் தனது உரையின் போது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாணவ தலைவர்களுடன் சில முக்கிய தலைமைத்துவ பண்புகளைப் பகிர்ந்து கொள்ள மறக்கவில்லை, மேலும் தனது மரியாதையையும் நன்றியையும் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை, சுதத் குணதிலக்க அவர்களுக்கு செலுத்தினார்.
நினைவுச் சின்னங்கள் பரிமாற்றத்துடன் நிறைவு பெற்றது.