21st April 2023 21:55:47 Hours
142 வது காலாட் பிரிகேடின் 14 வது விஜயபாகு காலாட் படையணியின் ஒரு அதிகாரி மற்றும் பதினைந்து சிப்பாய்கள் கல்லூரி அதிகாரிகளினால் இராணுவத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து 19 ஏப்ரல் 2023 அன்று கொழும்பு மஹாநாம கல்லூரியின் மாணவ சிப்பாய்களுக்கு 'வரைபடம் ஆய்வு' பற்றிய விரிவுரையினை நடாத்தினர்.
இதன் போது பட்டறை விரிவுரைகள் மற்றும் நடைமுறை அமர்வுகளில் அடிப்படையில் வரைபட ஆய்வு, வரைபடங்களை அறிமுகப்படுத்துதல், 'சில்வா திசைகாட்டி' பயன்பாடு போன்றவை தொடர்பில் அறிவூட்டப்பட்டது. மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி இந்த திட்டத்திற்கு தனது ஆசீர்வாதங்களை வழங்கினார்.