Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th October 2023 19:58:17 Hours

மலிம்படயில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவு வழங்கல்

நெருக்கடியான காலங்களில் தேசத்திற்கு சேவையாற்றுவதில் இராணுவத்தின் அயராத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் படி இலங்கை இராணுவப் படையினர், இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களையும் உணவு வழங்கும் பணியையும் ஆரம்பித்தனர்.

12 வது காலாட் படைப்பிரிவின் முயற்சியில் ருஹுணு கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயின் அனுசரணையில் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு உணவுகளை தயாரிப்பதற்கு தேவையான உலர்உணவு பொதிகளை வழங்கினர். 2023 ஒக்டோபர் 8-11 வரையான காலப்பகுதியில் இடம்பெயர்ந்த சுமார் 5,000 பேருக்கு படையினர் மாலிம்பட கிராம சேவகர் பிரிவில் தற்காலிக சமையல் கூடத்தை அமைத்து, உணவு தயாரித்தனர்.

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் படி படையினர் அவர்களது கட்டளை அதிகாரிகளுடன் உணவு சமைத்தது வழங்கினர். மாலிம்பட பிரதேசத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவைகளை வெற்றிகரமாக நிவர்த்தி செய்வதில் இந்த கூட்டு முயற்சிகள் பெரிதும் உதவியது.