Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th April 2024 18:02:41 Hours

மற்றொரு குடும்பத்தின் புதிய வீட்டிற்கு அடிக்கல் நாட்டல்

திருகோணமலை, சாரதாபுரத்தில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பம் ஒன்றுக்கு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 04 ஏப்ரல் 2024 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி 22 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் பேரில் 4 வது கவசப் வாகனப் படையணியின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. 4 வது கவச வாகனப் படையணி படையினரால் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீட்டிற்கான நிதி அனுசரணையை திரு.ருச்சிர விதானகே வழங்கினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 22 வது காலாட் படைபிரிவின் தளபதி கலந்து கொண்டார். விழாவில் 4 வது கவச வாகனப் படையணி கட்டளை அதிகாரி, அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.