16th January 2023 19:56:31 Hours
33 வருடங்களுக்கும் மேலாக நாட்டிற்கு சேவையாற்றிய இலங்கை இராணுவ சேவைப் படையணியின் மேஜர் ஜெனரல் தம்மிக்க காரியவசம் (ஓய்வு) அவருக்கு இராணுவ இறுதிக்கிரியைகள் திங்கட்கிழமை (16) பிற்பகல் குருநாகல் தொரட்டியாவ மயானத்தில் அவரது இராணுவ தோழர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இராணுவத் தளபதியை பிரதிநிதிப் படுத்தும் வகையில், போர் கருவி பணிப்பாளர் நாயகமும் இராணுவ சேவை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹிரோஷ வணிகசேகர அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இராணுவ மரபுகளின்படி படையினர் தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட சவப்பெட்டியை எடுத்து சென்று துப்பாக்கி வண்டியில் வைத்ததனை தொடர்ந்து மயான நுழைவாயிலுக்கு எடுத்து சென்றனர். இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஷ்ட அதிகாரிகளின் பிரதிநிதிகள் சவப்பெட்டியை முறையாகப் பெற்றுக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் சவப்பெட்டியின் பின்னால் அணிவகுத்து மயனத்தினை நோக்கிச் சென்றனர்.
இராணுவத் தளபதியினால் வெளியிடப்பட்ட முறையான சிறப்புப் கட்டளை பகுதி I குறித்த துக்க நிகழ்வில் வாசிக்கப்பட்டது. இராணுவ மரபுகளுக்கு இணங்க படையினர், பின்னர் இறந்தவருக்கு மரியாதை செலுத்தியதுடன் அவருக்கு ஓர் இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலி அடையாள துப்பாக்கி மரியாதையும் செலுத்தப்பட்டது.
மறைந்த சிரேஷ்ட அதிகாரி அவரது இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி அழைப்பு எழுப்பப்பட்டதுடன் அவரது பூதவுடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன் பின்னர், ஆயுதப் படைகளின் பொதுவான பாரம்பரியத்தின் பிரகாரம் மேஜர் ஜெனரல் ஹிரோஷ வணிகசேகர அவர்கள், மேஜர் ஜெனரல் தம்மிக்க காரியவசம் (ஓய்வு) தனது புகழ்பெற்ற பணியின் போது பெற்றுக்கொண்ட அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார். மறைந்த மேஜர் ஜெனரல் தம்மிக்க காரியவசம் (ஓய்வு) அவர்களின் இறுதிக் கிரியைகள் இராணுவ நிறைவேற்று அதிகார அலுவலக கிளையின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் பிறர் சோகத்துடன் மறைந்த அதிகாரிக்கு மரியாதை செலுத்தினர்.
இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட சிறப்பு கட்டளை பகுதி 1 பின்வருமாறு