16th February 2023 20:10:00 Hours
மறைந்த போர்வீரர் லான்ஸ் கோப்ரல் டி.ஜி.ஐ மதுஷங்க அவரது 15 வது நினைவு தினத்தை முன்னிட்டு 2023 பெப்ரவரி 08 திகதி அவரது குடும்பத்தினர் கம்புருப்பிட்டியில் உள்ள ‘அபிமன்சல – 2’ இல் வசிக்கும் போர்வீரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், ஆயுர்வேத உபகரணங்கள் மற்றும் தேநீர் விருந்துபசாரத்தினையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
உயிர்நீத்த போர் வீரரின் அன்புத் தாயார் திருமதி என்.எச்.ஜி. சாந்தி அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து 1 வது இலங்கை சிங்கப்படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் டி.ஜி.ஐ மதுஷங்கவுக்கு அவரது நினைவாக இந்த புண்ணியதானத்தினை ஏற்பாடு செய்தனர். 2008 பெப்ரவரி 08 ஆம் திகதி முல்லைத்தீவில் உள்ள முன்னரங்கு பாதுகாப்பு வலயத்தில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த போர்வீரன் லான்ஸ் கோப்ரல் டி.ஜி.ஐ மதுஷங்க தனது உயிரை தியாகம் செய்தார்.