Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2023 19:29:35 Hours

மன்னாரில் தென்னம் பிள்ளைகள் வழங்கல்

வடக்கில் முன்னெடுத்து வரும் 'தெங்கு செய்கை திட்டத்துடன் இணைந்த சமீபத்திய நிகழ்ச்சியின் போது 325 தென்னம் பிள்ளைகள் மன்னார் மாவட்டத்தின் அந்தோனியார்புரம், இழுப்புக்கடவை, தோட்டாவெலி, வெடித்தல்தீவு, சன்னார், பெரியமடு, பாலியாறு, தேவம்பிட்டி, அடம்பன், பரப்பகண்டல், வட்டக்கண்டல், காத்தான்குளம், நானாட்டான், அரிப்பு, மாந்தை, ஆண்டான்குளம் ஆகிய கிராம மக்களுக்கு வழங்கப்பட்டன. 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 541 வது காலாட் பிரிகேட் தளபதியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க அந்தந்த கிராமசேவை அதிகாரிகள் வழங்கிய தகவலைத் தொடர்ந்து 541 வது காலாட் பிரிகேடின் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி மற்றும் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி படையினர் 26 நவம்பர் 2023 அன்று அந்த தென்னம் பிள்ளைகளை வீட்டு வாசல்களுக்கு கொண்டு சென்று வழங்கினர்.

மேற்குறிப்பிட்ட கிராமங்களில் வசிக்கும் 65 குடும்பங்கள் அந்தந்த படையினரின் ஒருங்கிணைப்பின் மூலம் அந்த இலவச தென்னம் பிள்ளைகளை பெற்றனர்.