19th December 2023 00:17:52 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைப்பிரிவு, மத அனுஷ்டானங்களுடன் போர் வீர்ரகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது 15 வது ஆண்டு நிறைவு விழாவை டிசம்பர் 8 முதல் 10 வரை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச தலைமையகத்தில் கொண்டாடியது.
முதலில், பிரதேச தலைமையக வளாகத்தில் உள்ள போர் நினைவுத் தூபியில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) இடம்பெற்ற கம்பீரமான வைபவத்தில், வீரமரணம் அடைந்த போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், காயமடைந்த மற்றும் சேவையாற்றும் போர் வீரர்களுக்கு ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டன.
ஆண்டு நிறைவு நாளில் (டிசம்பர் 10) முகாமிற்கு வருகை தந்த 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசி அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அனைத்து நிலையினருக்கும் சிறப்புரை ஆற்றிய தளபதி படைப்பிரிவின் நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
நிகழ்வின் நினைவாக அனைவரும் குழுப் படம் எடுப்பதற்கு முன்பு வளாகத்தில் மரக்கன்று நடுவதற்காக படைப்பிரிவின் தளபதி அழைக்கப்பட்டார். மதிய உணவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவடைந்தன.