Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th March 2022 22:01:15 Hours

மத்திய முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

மத்திய முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச படையின் முதலாவது தளபதியாக இலங்கை இயந்திரவியல் மற்றும் மின்சார பொறிமுறைப் படையணியின் மேஜர் ஜெனரல் தீபால் ஹத்துருசிங்க செவ்வாய்க்கிழமை (8) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேற்படி அதிகாரி அலுவலக வளாகத்திற்கு வருகை தந்திருந்த வேளையி்ல் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, சிரேஷ்ட அதிகாரி அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.

மத்திய முன்னரங்கு பாதுகாப்பு படை பகுதியின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.