07th November 2023 00:13:34 Hours
தியத்தலாவ கதுருகமுவ மிஹிந்து வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 61 மாணவர்களிடையே பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் ஒக்டோபர் 20 ஆம் திகதி ஏற்பாடு செய்தனர். மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் ஏஎம்ஏ அபேசிங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் நன்கொடை விழாவில் கலந்து கொண்டார்.
எங்கர் பொன்டெரா லங்கா நிறுவனம் இந்த நிகழ்வுக்கான அனுசரணையை வழங்கியது. ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் பாடசாலை காலணிகள் மற்றும் கற்றல் உபகரண பொதிகள் வழங்கப்பட்டன.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் எங்கர் பொன்டெரா லங்கா நிறுவனத்தின் திரு. நிமல் கமகே உடன் அவர்களது அதிகாரிகளும் பாடசாலை ஆசிரியர்களும் இந்த நன்கொடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.