Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th November 2023 09:35:17 Hours

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் பெண்சிப்பாய்களுக்கு பயிற்சி பாடநெறி

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தில் பணியாற்றும் பெண்சிப்பாய்களுக்கு முதலாவது புதுபித்தல் பாடநெறி நவம்பர் 13 முதல் 25 வரை தியத்தலாவ படையலகு பயிற்சிப் பாடசாலையில் நடாத்தப்பட்டது.

இவ் இரண்டு வார பாடநெறியினை 2 அதிகாரிகளும், 72 பெண் இராணுவ சிப்பாய்கள் பின்பற்றினர். புதுபித்தல் பாடநெறியானது உள்ளக பாதுகாப்பு, துப்பாக்கிச் சூடு, முதலுதவி, உடற் பயிற்சி, தலைமைத்துவம் போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது. மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இதனை வெற்றிகரமாக முடிப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

பாடநெறியின் நிறைவு விழா நவம்பர் 25 அன்று மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் ஏஏஎம்ஏ அபேசிங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக் கேணல் பொதுப்பணி ஹேமச்சந்திர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைப்பெற்றது.