Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2019 08:47:56 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் தீயனைப்பு சேவைகள் முன்னெடுப்பு

பதுள்ளை மாவட்ட குல்துமுல்ல எனும் பிரிவின் கீழ் காணப்படும் கொஸ்லந்த எனும் பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று காலை செவ்வாய்க் கிழமை (12) இப் பிரதேசத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கான வழிகாட்டலை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்கள் வழங்கியிருந்தார்.

இதன் போது ஒரு அதிகாரி உள்ளடங்களாக 12 படையினரைக் கொண்ட குழுவினர் மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்களின் வழிகாட்டலிற்கமைய உடனடியான இப் பிரதேசத்திற்கு விரைந்து சென்றதுடன் ஒன்பது வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுடன் இணைந்து இத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

அதே போன்று மொனராகலை பிரதேசத்தில் மதிரிய , தெரப்புவ எனும் பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 121ஆவது படைப் பிரிவின் ஒரு அதிகாரி உள்ளடங்களான 25 படையினரைக் கொண்ட குழுவினர் செயற்பட்டனர். latest jordans | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092