07th November 2023 20:00:58 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் இரண்டாம் கட்டளை அதிகாரிகள் மற்றும் வழங்கல் பணிநிலை அதிகாரிகளுக்கான 6 நாள் பயிற்சி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 2023 ஒக்டோபர் 16 - 21 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
இப் பயிற்சியில் நிர்வாகம், வழங்கல் விடயங்கள், போக்குவரத்து, நடைமுறைகளை செயல்படுத்துதல், இராணுவத்தில் விநியோக விடயங்கள் போன்றவை தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டதுடன், 15 அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ வீஎஸ்வீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இத் திட்டத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவை செய்யும் தகுதி வாய்ந்த வழங்கல் அதிகாரிகளால் பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பங்குபற்றிய ஒவ்வொருவருக்கும் மத்திய முன்னரங்கு பராமரிப்புப் பகுதி தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.பீ.பீ தசநாயக்க அவர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.