03rd December 2023 21:59:35 Hours
தொடர் மழை காரணமாக தியத்தலாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் மீண்டும் விழுந்த மண் மேடுகள் மற்றும் பாறைகளை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 01) அகற்றினர்.
இதனால் கொழும்பில் இருந்து பதுளை வரை இயங்கும் மலையக புகையிரத பாதையில் இடையூறு ஏற்பட்டதுடன், காலை வேளையில் படையினர் தடைகளை நீக்கி புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு வழிவகுத்தனர்.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று படையினருக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.