07th November 2023 05:35:02 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படைப்பிரிவு, பிரிகேட் மற்றும் படையலகுகளின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு தலைமைத்துவப் பட்டறையை ஒக்டோபர் 16 – 21 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியாங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ அவர்கள் பட்டறைக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்கினார்.
அதன்படி, 40 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் பட்டறையில் பங்கேற்றனர். இராணுவ சம்பிரதாயபடி உணவகத்தில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியதுடன், பட்டறை முடிவடைந்தது.