18th November 2023 00:24:20 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் அதன் கீழ் பணியாற்றும் படையினருக்காக 'ஒழுங்கமைத்தல் பயிற்சி மற்றும் புகைப்படம் எடுத்தல்/ வீடியோ எடுத்தல்' பற்றிய ஆற்றல் மிக்க செயலமர்வை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியாங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2023 நவம்பர் 13 முதல் 16 வரையான திகதிகளில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள கட்டளை அமைப்புகளில் இருந்து ஒரு அதிகாரி மற்றும் 39 சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விரிவுரைகள் மற்றும் நடைமுறை அமர்வுகள் இராணுவத் தலைமையக ஊடக பணிப்பகத்தின் அறிவிப்பாளர் அதிகாரவாணையற்ற அதிகாரி -1 ஏ.ஏ.என்.டி அமரசிங்க அவர்களினால் நடாத்தப்பட்டது.
அமர்வுகளின் போது பங்கேற்பாளர்கள் இராணுவ/இராணுவமற்ற நிகழ்வுகள், சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ஊடக வெளியீடுகளை நடத்துவதற்கு இராணுவ நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோகிராபி பற்றி அறிந்து கொண்டனர்.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் ஒருங்கிணைப்பு லெப்டினன் கேணல் பீ.பி.ஜி விதானகே அவர்களினால் செயலமர்வின் ஆரம்ப உரை நடாத்தப்பட்டது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் பொதுப்பணி கேணல் டபிள்யூ.ஏ.ஜே ஹேமச்சந்திர ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களால் வழங்கப்பட்ட நிறைவுரையுடன் நான்கு நாட்கள் நீடித்த செயலமர்வு நிறைவு பெற்றது.