08th July 2023 21:46:35 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதியான இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச் ஆர் ஆர் வி எம் என் டி கே பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்களை மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினர் இராணுவ மரபுகளுக்கமைய வரவேற்பதற்காக நிகழ்வினை புதன்கிழமை (ஜூலை 05) ஏற்பாடு செய்திருந்தனர்.
சிரேஷ்ட அதிகாரியை தலைமையகத்தின் சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதுடன் இராணுவ சம்பிரதாயங்களுக்கு ஏற்ப இராணுவ படையினர் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். அவர் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையில் ஆவணத்தில் கையொப்பமிட்டதுடன் தேநீர் விருந்துபசாரத்திற்கு முன் படையினருக்கு உரையாற்றினார்.
மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் படைப்பிரிவு தளபதிகள், சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள் மற்றும் படையலகுகளின் கட்டளை அதிகாரிகள், இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் புதிய தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க அங்கு வந்திருந்தனர்.