09th August 2023 18:05:04 Hours
மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள், புதிதாகப் நிர்மாணிக்கப்பட்ட சிப்பாய்களின் உணவகம், சிற்றுண்டிசாலை, சலவை வசதி கொண்ட கட்டிடத்தை ஓகஸ்ட் 8 ஆம் திகதி இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வின் போது திறந்து வைத்தார்.
படையினரின் நலன்புரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கூறிய வசதிகளை கொண்ட கட்டுமானப் பணிகள் இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
திறப்பு விழா நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.