12th July 2023 20:28:37 Hours
மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் புதிய பல வசதிகளுடனான வளாகமானது ஜூலை 8 இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் கேஎடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இவ் வளாகத்தில் சலூன், உணவுசாலை, எழுதுபொருட்கள் கடை மற்றும் ஒரு தையல் நிலையம் ஆகியவற்றில் அனைத்து அன்றாட தேவைகளையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து பிரதம அதிதி பதாகையை திரைநீக்கம் செய்து ரிப்பன் வெட்டி புதிய வளாகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துக்கொண்டனர்.