26th May 2023 11:05:09 Hours
சமீபத்தில் நிலை உயர்வு பெற்ற புத்தள இராணுவ போர் கல்லூரயின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களுக்கு, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் 2023 மே 24 அன்று பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவரகளை பிரதித் தளபதி பிரிகேடியர் எம்சிஎஸ்கே சேனாரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் மரியதையுடன் வரவேற்றார், அவருக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டதுடன், இராணுவ சம்பிரதாயங்களுக்கமைவாக அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வைக் குறிக்கும் வகையில், மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் வளாகத்தில் மரக்கன்றினையும் நட்டார். மேலும் தளபதி போர் கல்லூரியில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கும் உரையாற்றினார்.
உரையின் போது, அவர் தனது வாழ்க்கையில் இந்த முக்கியமான இடத்தை அடைய வழிகாட்டிய அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்ததுடன், அன்றைய ஏற்பாடுகளை முன்னெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தளபதி அனைத்து நிலையினருடனும் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
தலைமைப் பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விழாவில் கலந்து கொண்டனர்.