09th August 2019 16:50:16 Hours
2019 க்கான விஜயபாகு காலாட் படையணியின் சுப்பர் குரோஸ் விளையாட்டு போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு (09) ஆம் திகதி வெள்ளிக்கிழமை கலதாரி ஹோட்டலில் விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.டி.சி.டி குணவர்தன தலைமையில் நடைபெற்றது.
அதன்படி ஓகஸ்ட் 25 ஆம் திகதி போயகனையில் நடைப்பெற இருக்கும் 17 ஆவது சுப்பர் குரோஸ் விளையாட்டு போட்டியானது விஜயபாகு காலாட் படையணியின் 13 அம்சங்கள் உள்ளடக்கி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும்.
என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இவ் வருடம் இந்த போட்டியில் தாய்லாந்தில் இருந்து இரண்டு ரைடர்ஸ் மற்றும் ஜப்பானில் இருந்து ஒருவர் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர், மேலும் விண்ணப்பங்களுக்கான இறுதி தேதி ஓகஸ்ட் 13 ஆம் தேதி இருக்கும் அத்துடன் விஜயபாகு காலாட் படையணியின் மற்றும் இலங்கை ரைடர்ஸ் அசோசியேஷன் ஆகியவற்றிலிருந்து விண்ணப்பங்களைப் பெறலாம் என்று ஊடக பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் சிசிர ஹேரத் மற்றும் துனை பணிப்பாளர் பிரிகேடியர் டபில்யூ.எஸ் ஆரியசிங்க, விஜயபாகு காலாட் படையணியின பிரதி கட்டளை தளபதி கேர்ணல் டி.கே அலுதெனிய, இலங்கை ரைடர் சங்கத்தின் தலைவர் திரு உபாலி திசாநாயக, இலங்கை ரைடர் சங்கத்தின் செயலாளர் திரு பி ரகுநாதன் ஆகியோர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்விலிருந்து திரட்டப்பட்ட நிதி ஒதுக்கீடு விஜயபாகு காலாட் படையணியின் போர் வீரர்கள் மற்றும் அங்வினமுற்ற மற்றும் மரணித்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடதக்கவிடயமாகும். இந்த சந்திப்பில் பெரும் திரலான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். Sports brands | Nike Running