12th January 2020 08:07:28 Hours
பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து அவர்கள் பூனரின் அரசபுரகுள பிரதேசத்தில் அமைந்துள்ள 5 ஆவது (தொண்டர்) பொறிமுறை காலாட் படையணி தலைமையகத்திற்கு (09) ஆம் திகதி வியாழக்கிழமை தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை இப் படைத் தலையைமகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஏ.டபில்யூ ஹேமந்த குமார மற்றும் பட்டாலியனின் புதிதாக வடிவமைக்கப்பட்ட பெயர் பலகையை பிரதான நுழைவாயிலில் திறந்துவைப்பதற்காக அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து படையினரால் நூலைவாயில் வைத்து கௌரவ மரியாதை வழங்கப்பட்டனர்.
பின்னர், பிரதம அதிதி அவர்கள் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்த அவர் புதிய கேட்போர் கூடத்தை திறந்து வைத்தார், பின்னர், பட்டாலியனின் பணிகள் தொடர்பான முறையான விளக்கத்தைப் படையினர்களுக்கு உரையாற்றினார்.
அவரது விஜயத்தின் அடுத்த நிகழ்வாக தலைமையக வளாகத்திற்குள் புதிதாக கட்டப்பட்ட அதிகாரிகளின் உணவகம் திறந்து வைக்க அழைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து குழு புகைப்படத்திலும், அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டு அவர், வருகையின் நினைவாக அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.
பொறிமுறை காலாட் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் எஸ்.ஜே பிரியதர்ஷன படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றம் படையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். Nike Sneakers | Sneakers