04th December 2023 19:20:47 Hours
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.டபிள்யூ.கே.என் எரியாகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 23 நவம்பர் 2023 அன்று புனரமைக்கப்பட்ட கட்டுகெலியாவ படையலகு பயிற்சிப் பாடசாலையை திறந்து வைத்தார்.
முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.பி. அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் பேரில் கட்டுகெலியாவை படையலகு பயிற்சிப் பாடசாலையின் 58 வது காலாட் படையினர் புனர்மைப்பு பணியை மேற்கொண்டனர். 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.டபிள்யூ.கே.என் எரியாகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 582 காலாட் பிரிகேட் தளபதி எஸ்.டபிள்யூ.ஆர். பிரசன்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் கட்டுகெலியாவை படையலகு பயிற்சிப் பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர் லெப்டினன் கேணல் கே.என்.பீ களுபோவில ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இத் திட்டம் விரைவாக நிறைவேற்றப்பட்டது.
புனரமைக்கப்பட்ட கட்டுகெலியாவை படையலகு பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியை ஆரம்பித்த முதல் குழுவில் 1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் அடங்குவர். 58 வது காலாட் படைப்பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.