27th March 2023 23:41:56 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேர, 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சேனக கஸ்தூரிமுதலி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்களுக்கு கடுமையான போதைப்பொருள் அபாயங்கள், போதைப் பழக்கம் மற்றும் தடுப்பது குறித்து விழிப்புணர்வு செயலமர்வு 2023 மார்ச் 22 நடாத்தப்பட்டது.
அபாயகரமான போதைப் பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் உதவிப் பணிப்பாளர் உட்பட மேலும் நான்கு அதிகாரிகளுடன் மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திற்காக பெறுமதிமிக்க விரிவுரைகளை ஆற்றி வருகை தந்தவர்களுக்கு அறிவை வழங்கினார்.
682 வது காலாட் பிரிகேட் தளபதி பாடசாலை மற்றும் கல்வி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து முழு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்வதில் முன்னிலை வகித்தார்.
ஏற்பாட்டில் 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 682 வது காலாட் பிரிகேட் தளபதி, கட்டளை அதிகாரிகள், முல்லைத்தீவு கோட்டக் கல்வி மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, விரிவுரைகளுடன் கூடிய அதே நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) 68 வது காலாட் படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது. 68 வது காலாட் படைப்பிரிவின் 340 க்கும் மேற்பட்ட படையினர் ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் அதிகாரிகளால் ஆற்றப்பட்ட விரிவுரைகளை செவிமடுத்தனர்.