16th December 2022 19:21:53 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்கள் டிசம்பர் 8 முதல் 9 வரையிலான காலப்பகுதியில் தனது செயற்பாட்டு பொறுப்புகள் பற்றிய புதுப்பிப்புகளைப் பெறும் நோக்கத்துடன் தனது படையலகுகள் மற்றும் பிரிகேட்களுக்கு விஜயம்மேற்கொண்டார்.
தளபதி அவர்கள் முதல் நாள் லக்ஷபான நீர் மின் நிலையம் மற்றும் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி முகாமிற்கு விஜயம் செய்து பின்னர் நுவரெலியாவில் உள்ள பிதுருதலாகலை ஒலிபரப்பு நிலையம் மற்றும் 3 வது (தொ) இலங்கை சிங்க படையணி முகாமை பார்வையிட்டார்.
இந்த விஜயங்களின் போது தளபதயினை 3 வது (தொ) இலங்கை சிங்கப்படையணி கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.ஜி.டி.டபிள்யூ.ஏ.எம்.ஆர்.பி.எஸ்.போயகொட மற்றும் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஏ.இ.பி.பண்டாரவத்த மிக அன்பான வரவேற்பு அளித்ததுடன் இராணுவ பாரம்பரிய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து படையினருக்கான உரை, மரக்கன்று நாட்டல், அனைத்து நிலையினருடனான மதிய விருந்துபசாரம் என்பவற்றில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் 111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க அவர்கள் 112 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுமிது தயாவன்ச அவர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.