16th February 2023 19:55:04 Hours
ராகம ரணவிரு செவன, அத்திடியவில் உள்ள மிஹிந்து செத் மெதுர மற்றும் ‘அபிமன்சல 1, 2, 3’ ஆகியவற்றின் புதிய பணியாளர்களுக்கு புனர்வாழ்வு செயல்முறைகள் மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் பற்றிய அடிப்படை அறிவை வழங்கும் செயலமர்வு வத்தளையில் உள்ள புனர்வாழ்வு பணியகத்தில் பெப்ரவரி 6-10 திகதிகளில் நடைப்பெற்றது.
புனர்வாழ்வுக்கு அதிக துல்லியம், கவனிப்பு மற்றும் பொறுமை தேவை என்பதால் அண்மைக் காலத்தில் பணிப்பகத்தில் சேர்ந்த புதிய அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் அனைவருக்கும் இந்த சிறப்புத் பயிற்சி திட்டம் வழங்கப்பட்டது. புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்.சி ஏக்க நாயக்க தலைமையிலான புனர்வாழ்வு பணிப்பகம் புதிய உறுப்பினர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்யும் திட்டத்தை ஏற்பாடு செய்தார்.