Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th June 2023 17:10:28 Hours

புதிய கிழக்கு தளபதி பதவியேற்பு

இலங்கை சிங்க படையணியின் மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யிஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் திங்கட்கிழமை (ஜூன் 12) கடமைகளை பொறுப்பேற்றார்.

பணிநிலை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் வண்ணமயமான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

பின்னர் புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், மகா சங்கத்தினரின் ‘செத்பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். அன்றைய நிகழ்விற்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில் வளாகத்தில் மரக்கன்று நாட்டல் குழுப்படம் எடுத்தல் என்பவற்றிலும் அவர் கலந்துக் கொண்டார்..

இறுதியாக, புதிய கிழக்கு தளபதி படையினருக்கு உரையாற்றினார். இந்நிகழ்வில் 22 ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.