15th December 2022 16:33:08 Hours
இலங்கை இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதன் பின்னர் திங்கட்கிழமை (12) கிழக்கிற்கான தனது விஜயத்தின் போது வெலிகந்த கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நிர்வாக விடயங்களை ஆராய்ந்தார்
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் அன்புடன் வரவேற்றார். பின்னர் தலைமையகத்தின் நுழைவாயிலில் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
இராணுவத்தின் நிர்வாகப் பிரச்சினைகள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் சமாளிக்க வருடாந்த நிர்வாக ஆய்வு நடத்துவதன் முக்கியத்துவத்தை இராணுவ பதவி நிலைப் பிரதானி வலியுறுத்தினார். இராணுவ பதவி நிலைப் பிரதானியுடன் வருகை தந்த வெவ்வேறு பணிப்பகங்கள் மற்றும் கிளைகளின் அதிகாரிகள் தங்கள் அவதானிப்புகளை சமர்ப்பித்தனர் மற்றும் அத்தகைய சிக்கல்களைத் தீர்ப்பது தொடர்பான நடைமுறைகளையும் முன்வைத்தனர்.
அந்தந்தப் படைப்பிரிவுகளின் தளபதிகள், கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பகுதி தலைமையகம், இராணுவத் தலைமையகத்தின் பணிப்பக பணிப்பாளர்கள் மற்றும் பணிநிலை அதிகாரிகள், , அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலை தளபதி, அனைத்துப் பிரிகேட் தளபதிகள், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள் ஆகியோர் நிர்வாக ஆய்வின் போது கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் முடிவில், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, இலங்கை இராணுவ பதவி நிலைப் பிரதானிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார். அவர் புறப்படுவதற்கு முன், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது பாராட்டுக் குறிப்பை பதிவு செய்தார்.