18th November 2023 00:10:20 Hours
வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) காலை தியத்தலாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பாதையில் தடையாக இருந்த பாரிய மண் மேடு மற்றும் கற்பாறைகளை அகற்றுவதற்கு தியத்தலாவ மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக அதிகாரி ஒருவர் உட்பட இராணுவ குழுவொன்று தமது மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியாங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு கிடைத் தகவலுக்கு அமைய இந்த மண்மேடுகள் அகற்றப்பட்டு ரயில் சேவையை இயக்க உதவுமாறு மத்திய படையினருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய படையினரால் இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இப் பணியில் ஒரு அதிகாரி மற்றும் 20 படையினர் கலந்துகொண்டு சில மணிநேரங்களில் தடையை நீக்கினர்.