23rd December 2023 14:44:01 Hours
வன்னி பாதுகாப்பு படை தலைமையக 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படையினரால் சேவை செய்ய முடியாத டிடி 175 சிசி மோட்டார் சைக்கிள்களுக்கு பஜாஜ் 150 சிசி இன்ஜினை மாற்றுவதன் மூலம் பாவனைக்குதவாத மோட்டார் சைக்கிள் எஞ்சின் முழுமையாக மாற்றுவதற்கான சோதனை அடிப்படையில் மாற்றியமைக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திட்டத்தின் தொடக்கமாக, புத்தம் புதிய பஜாஜ் 150 சிசி எஞ்சினைப் பயன்படுத்தி பாவனைக்குதவாத டிடி 175 சிசி மோட்டார்சைக்கிளில் எஞ்சின் மாற்றம் செய்யப்பட்டதுடன், மாற்றியமைக்கும் செயல்முறை சாலியபுர 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி முகாமில் வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி கட்டளை அதிகாரி மேஜர் கே.பீ.சி பெர்னாண்டோ யுஎஸ்பீ பீஎஸ்சி எல்எஸ்சி இத்திட்டத்தினை மேற்பார்வையிட்டார். கோப்ரல் எச்.ஆர்.கே.சி அரவிந்த மற்றும் லான்ஸ் கோப்ரல் எல்.ஜி.டி.எம் ஜயசிங்க ஆகியோர் இந்த திட்டத்தில் தொழில்நுட்ப வல்லுனர்களாக ஈடுபட்டுள்ளனர். ஆரம்ப கண்காணிப்பு மற்றும் சோதனை ஓட்டங்கள் 18 டிசம்பர் 2023 அன்று தலைமையக வளாகத்தில் வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி முன்னிலையில் நடத்தப்பட்டது.