15th July 2023 18:09:47 Hours
பிரான்ஸ் பாரிஸில் வியாழன் (ஜூலை 13) நடைபெற்ற பெரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் 2023 இல் ஈட்டி எறிதல்-எப்44 பிரிவில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த பணிநிலை சார்ஜென்ட் கேஏஎஸ் துலான் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்
இலங்கையின் தேசிய பெரா விளையாட்டு குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ்வில் இராணுவத்தின் சிறந்த பெரா தடகள வீரர்களில் ஒருவராக புகழ் பெற்ற பணிநிலை சார்ஜென்ட் கேஏஎஸ் துலன் கலந்து கொண்டார். போட்டியில் 64.06 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
பெரா தடகள உலக சாம்பியன்ஷிப்பில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி 10 தேசிய பெரா விளையாட்டு வீரர்கள் குழு பங்குபற்றுகின்றனர்.