30th May 2023 21:33:03 Hours
கதிர்காமம் நோக்கிய வருடாந்த பாதயாத்திரை செல்லும் சுமார் 80 பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை (7) முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
அதற்கமைய முல்லைத்தீவு - பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களின் பணிப்புரையின் பேரில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் அந்த பாதயாத்திரிகர்களுக்கு மதிய உணவு விருந்து வழங்க ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, முல்லைத்தீவு - பாதுகாப்புப் படைத் தலைமையக சிவில் விவகார அதிகாரியின் ஒருங்கிணைப்புடன் படையினரால் அனைத்து பக்தர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.