Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2023 19:33:07 Hours

பல்லேகல 'விரு கெகுலு' பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கப்படும் பல்லேகலை 'விரு கெகுலு' பாலர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 23) பல்லேகலை 'விரு கெகுலு' விளையாட்டு மைதானத்தில் நிகழ்வின் பிரதம அதிதியான இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி .திருமதி ஜானகி லியனகே அவர்களின் வருகையுடன் நடைபெற்றது.

அன்றய நிகழ்வை பார்வையிடுவதற்காக வளாகத்திற்கு வருகை தந்த திருமதி ஜானகி லியனகே அவர்களை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பிள்ளைகள் இணைந்து அன்புடன் வரவேற்றனர். பேண்ட் கண்காட்சி, முச்சக்கர சைக்கிள் ஓட்டம், நட்சத்திர விளையாட்டு, பால் விளையாட்டு, மீன் வலை விளையாட்டு, அணிநடை போன்ற பல்வேறு காட்சிகள் மற்றும் விளையாட்டுகளில் பிள்ளைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர், மேலும் அந்த பிள்ளைகளின் பெற்றோர்களும் நிகழ்ச்சியின் போது சிறப்பு விளையாட்டுகள் மற்றும் வேடிக்கையான நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

பிரதம விருந்தினர் பிள்ளைகளுக்கு பரிசுகளை வழங்கினார். பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் உரையாடி தேநீர் உபசாரத்திலும் கலந்து கொண்டதுடன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளையும் எழுதினார்.

11 வது காலாட் படைப்பிரிவின் பிரதிப் தளபதி பிரிகேடியர் கேஎம்டபிள்யூ பண்டார, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி ஷியாமலி விஜேசேகர, பல்லேகல 'விரு கெகுலு' பாலர் பாடசாலையின் நிர்வாகத்திற்கு பொறுப்பான இராணுவ சேவை வனிதையர் பிரிவின் திருமதி சந்திமா பண்டார, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்களும் இந் நிகழ்வில் கலந்து பொண்டனர்.