Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2022 19:23:01 Hours

பயிற்சி பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கஜபா படையணியின் தலைமையகத்தில் தலைமைத்துவம் மற்றும் மொழி திறன் பயிற்சி

நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்களின் பயிற்சி பாடசாலைகளில் பயிற்சி பெறும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கான ஒரு மாத கால ஆங்கில மொழி மற்றும் தலைமைத்துவ பயிற்சி 30 ஓகஸ்ட் முதல் 30 செப்டம்பர் - 2022 வரை சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்டன.

சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் பயிற்சி பணிப்பகத்தில் பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நாடளாவிய பொது சுகாதார பரிசோதகர்கள் பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 321 பொது சுகாதார பரிசோதக பயிற்சியாளர்கள், ஆளுமை மேம்பாடு, தனிமனித மனப்பான்மை, நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஆங்கில மொழிப் புலமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.

செப்டெம்பர் 30 ஆம் திகதி இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கஜபா படையணியின் தலைமையகத்தின் நிலைய தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி நிலைய தளபதி கேணல் ரொஷான் கலுபாஹன கலந்துகொண்டார். பாடநெறியின் பயிற்றுவிப்பாளர் குழுவிற்கும் அதே சந்தர்ப்பத்தில் பாராட்டு சின்னங்கள் வழங்கப்பட்டன.