10th July 2023 11:34:44 Hours
பனாகொட இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் சனிக்கிழமை (ஜூலை 08) காலை இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் சி டி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தலைமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கூடைப்பந்து மைதானம் திறந்து வைக்கப்பட்டது.
இம் மைதானம் நவீன வசதிகளுடன் கூடிய அரங்கத்தை கொண்டுள்ளது மற்றும் மாலை நேரங்களில் எந்தவித சிரமமும் இன்றி போட்டிகளை நடத்தும் திறன் கொண்டது. மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க இலங்கை இலேசாயுத காலாட் படையணி நிலைய தளபதி கேணல் எம்பீஎஸ்பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
திறப்பு நிகழ்வின் பின்னர், இராணுவ கூடைப்பந்து வீரர்களின் இரு குழுக்களுக்கு இடையே நட்பு ரீதியான போட்டியும் நடைபெற்றது. இறுதியில் பிரதம அதிதி கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந் நிகழ்வை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ, இலேசாயுத காலாட் படையணியின் பணி நிலை அதிகாரிகள், கட்டளைத் அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் பார்வையிட்டனர்.