02nd November 2023 20:58:18 Hours
தென்மாகாண விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தென் மாகாண சுதேசிய உணவுத் திருவிழாவான ‘ருஹுனு ரச சரணிய’ ஒக்டோபர் 27 - 28 ஆம் திகதிகளில் காலி நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
உணவுத் துறையில் முதலீடு செய்ய விரும்பும் இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உணவு வகைகள் மற்றும் சமையல் வகைகளை பிரபலப்படுத்தும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
ஆர்வமுள்ள குழுக்கள், பிள்ளைகள் மற்றும் வளரும் முதலீட்டாளர்கள் என ஏராளமானோர் இரு நாட்களிலும் பங்கேற்றனர்.
இந் நிகழ்வை 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எஜே.என் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ மற்றும் தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகே ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
இந்த மாபெரும் உணவு திருவிழாவில் தென் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான உணவு நிபுணர்கள் கலந்து கொண்டனர். 61 காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை அலகுகளின் படையினர் அரச அதிகாரிகளுக்கு உதவியதுடன் உணவு விற்பனை நிலையங்களையும் நிர்மாணித்து நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.