07th November 2023 20:09:10 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 வது காலாட் படைப்பிரிவின் 213 வது காலாட் பிரிகேட்டின் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 9 வது (தொ) பொறியியல் சேவை படையணியின் படையினர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) மதவாச்சி கீதாவரம்குளம், தேவனம்பியதிஸ்ஸபுர போகஹாவெவ குளம் ஆகியவற்றில் ஏற்பட்ட வெடிப்புகளை அடைத்து நீர் கசிவ தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதன்படி, 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர் கீழ்வரம்குளம் குளத்தின் ஏற்பட்ட வெடிப்பை மணல் மூடைகளை கொண்டு சரி செய்து கசிவைத் தடுத்தனர்.
அதே நேரத்தில், 9 வது (தொ) பொறியியல் சேவை படையணியின் 11 பேர் துரித நடவடிக்கை எடுத்து, 50க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி போகஹாவெவ குளத்தில் பெரும் வெடிப்பை சரி செய்தனர்.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 9 வது (தொ) பொறியியல் சேவை படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் 213 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் மேற்பார்வையில் படையினரால் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.